நலமா என்ற ஒற்றைச்சொல்போதும்
நம் மௌனங்களை உடைத்தெறிய ..
அதை முதலில் சொல்வது யார்?
நீயா? நானா ?...
சன்னமாய் ஒரு புன்னகைபோதும்
சரளமாய் நாம் உரையாட ..முதலில்
புன்னகை செய்வது யார் ?
நீயா? நானா?
திருக்குறளாய் ஒரு குறுச்செய்திபோதும்
நம் கோபங்களைக் கலவாடிச்செல்ல..
முதலில் குறுச்செய்தி அனுப்புவது யார்?..
நீயா ?நானா?
இப்படியே நீள்கின்றன நம் நட்பின்
நாட்களும் நீயா?நானா ?என்று
நம்மைவிட்டு .........................!